Wednesday 8th of May 2024 06:34:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

வடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


யாழ்ப்பாணத்தின் மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் கொரோனா பரிசோதனைக் கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில்,

யாழ்மாவட்டத்தினைச் சேர்ந்த மூவர், கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த ஐவர், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பேர் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பதினாறு பேருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு மாகாணத்தில் இன்று தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE